கடந்த சில பதிவுகளில் வங்கி-வாடிக்கையாளர் உறவின் சில பரிமாணங்களைப் பார்த்தோம். இந்த உறவுகளில் மிகவும் அடிப்படையானதும் முக்கியமானதுமான உறவு ஒன்று உள்ளது.
அதுதான் வங்கி தன்னுடைய வாடிக்கையாளருக்கு முகவராக (Agent) செயலாற்ற வழிவகுக்கும் உறவு. கடன் வழங்குபவர்-கடனாளி என்ற உறவிற்கு அடுத்தபடியாக மிகவும் முக்கியம் வாய்ந்த உறவு இது. இந்த உறவின் அடிப்படையில்தான் ஒரு வங்கி தன்னிடம் கணக்கு வைத்திருக்கும் ஒரு வாடிக்கையாளருடைய பல தனிப்பட்ட அல்லது வர்த்தக ரீதியான தேவைகளை நிறைவேற்றுகிறது.
இந்த உறவு வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி வங்கி ஆற்றும் பணிகளில் மிகவும் அடிப்படையான இரண்டு பணிகள்:
1. வாடிக்கையாளருடைய வாடிக்கையாளர்களிடமிருந்து வரவேண்டிய பாக்கிகளை வசூல் (Collect) செய்வது.
2. வாடிக்கையாளருடைய வாடிக்கையாளருக்கு கொடுக்க வேண்டிய தொகையை பட்டுவாடா (Payment) செய்வது.
தனிநபரானாலும் வணிகம் மற்றும் தொழில் செய்பவரானாலும் பரிமாற்றங்கள் (கொடுக்கல்-வாங்கல்) நிச்சயம் இருக்கும். இவை பண்டமாகவோ பணமாகவோ இருக்கலாம். பண்டைய காலத்தில் வழக்கத்தில் இருந்துவந்த பண்டமாற்று முறைக்கு மாற்றாக 'பணம்' என்கிற ஒரு பொதுவான அடிப்படை அளவீடு (Measure) கண்டுபிடிக்கப்படும் வரை வங்கிகளின் முக்கியத்துவத்தை பலரும் உணரவில்லை.
இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பண பரிமாற்றம் என்பது மிக இன்றியமையாததாகிவிட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.
வணிக போக்குவரத்து துறையில் (Commercial Transportation) சமீபகாலங்களில் ஏற்பட்டுள்ள அசுர வளர்ச்சி ஒரு நாட்டின் ஒரு கோடியிலிருக்கும் ஒருவர் அதே நாட்டின் மறு கோடியிலுள்ளவருடன் மட்டுமல்லாமல் உலகின் எந்த மூலையிலும் வசிக்கும் ஒருவருடன் வணிக பரிவர்த்தனைகளை (Business transactions) வைத்துக்கொள்ள வகை செய்துள்ளது. இத்தகைய பரிவர்த்தனைகளில் அடிப்படையாக செயல்படுவது பணம்.
வணிக பரிமாற்றங்களில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கிடையிலிருந்த இடைவெளி (distance) அதிகரிக்க, அதிகரிக்க இத்தகைய பரிமாற்றங்களில் பயன்படுத்தப்பட்ட ரொக்கப் பணத்திற்கும் ஒரு நிகரான மாற்று தேவைப்பட்டது. இன்று அனைவருடைய நாவிலும் மிகவும் சர்வ சாதாரணமாக புரளும் வார்த்தை 'காசோலை' (Cheque). ரொக்கப் பணத்திற்கு மாற்றாக இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் காகித சீட்டு (காசோலை) 1717ம் வருடம் பாங்க் ஆஃப் இங்கிலாந்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக காசோலையின் பயன்பாட்டை குறைக்கும் எண்ணத்துடன் பல தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன என்றாலும் இன்றும் உலக வணிக பரிமாற்றங்களில் கணிசமான அளவு காசோலை வழியாகத்தான் செயல்படுத்தப்படுகிறது.
விற்பவர்-வாங்குபவர் (Seller-Buyer) உறவில் சம்பந்தப்பட்ட இருவர் தங்களுடைய பரிமாற்றங்களின் விளைவாக ஏற்படும் நிலுவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள (settlement of business transactions) மிகவும் உதவியாயிருக்கும் இந்த காசோலைகளை அதை வழங்கியவருடைய (விற்பனையாளர்) கணக்கிலிருந்து வசூல் செய்து பெற்றுக்கொண்டவருடைய (வாங்கியவர்) கணக்கில் வரவு வைக்கும் பணியை ஆற்றக் கூடிய ஒரு இடை நபராக, முகவராக (Mediator/Agent) வங்கிகள் செயல்படுகின்றன.
தொடரும்..
வங்கி சேவைகளைப் பற்றி வங்கியைப் பற்றி அறியாதவர்களுக்கு விளக்குவதே இந்த பதிவின் நோக்கம். எளிய தமிழில் வங்கி சேவைகளை அனைவரும் புரிந்துக்கொள்ளும் வகையில் எழுதுவதுதான் என்னுடைய நோக்கம்.
Friday, August 27, 2010
வங்கியுலகம் 7 முகவர் சேவை
Thursday, August 26, 2010
வங்கியுலகம் 6 டிரஸ்டி சேவை
2. கடன் பத்திரங்கள், பங்குகள், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை பாதுகாத்தல் (Safe Security Deposit)
இந்த உறவில் வாடிக்கையாளருக்கு சொந்தமான சொத்துக்கள் (பெரும்பாலும் பத்திரங்கள், பங்குகள், ஆவணங்கள்) வங்கியிடம் பாதுகாப்புக்காக அளிக்கபடுகின்றன.
பாதுகாப்பு பெட்டக வசதிகளிலிருந்து இது எந்த வகையில் மாறுபடுகிறது என்ற கேள்வி எழலாம். பாதுகாப்பு பெட்டக வசதி வழங்கப்படும்போது அதில் என்ன வைக்கப்படுகிறது என வங்கிக்கு தெரிவதில்லை. பெட்டகம் மட்டுமே வாடகைக்கு வழங்கப்படுகிறது.
ஆனாக் இந்த டிரஸ்டி (Trustee) உறவில் வாடிக்கையாளர் தன்னுடைய சொத்தின் விவரத்தை அதாவது வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டிய சொத்தின் பட்டியலை அதற்குறிய படிவத்துடன் (Safe Security Deposits Form) வழங்குகிறார். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்களுடன் டெப்பாசிட் செய்யப்படும் ஆவணங்களை சரிபார்த்தபிறகே அவற்றை பாதுகாப்புக்காக பெற்றுக்கொண்ட சான்றிதழை வங்கி வழங்குகிறது. பாதுகாப்புக்கென வைக்கப்பட்ட பத்திரங்கள்/ஆவணங்கள் எவ்வாறு கையாளப்பட வேண்டும், எவ்வாறு திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்பவற்றை வாடிக்கையாளர் தன்னுடைய டெப்பாசிட் படிவத்தில் குறிப்பிட்டுள்ளபடி வங்கி கையாளவோ திருப்பிக்கொடுக்கவோ வேண்டும். இந்த உறவில் வங்கி ஒரு பொறுப்புள்ள பாதுகாப்பாளராக (Trustee) செயல்படுகிறார்.
சில சமயங்களில் வாடிக்கையாளர் டெப்பாசிட் செய்யப்பட்டுள்ள கடன் பத்திரங்களுக்குண்டான வட்டி அல்லது பங்குகளுக்கான டிவிடெண்ட் தொகை ஆகியவற்றை வசூல் செய்யும் உரிமையையும் வங்கிகளுக்கு வழங்குவதுண்டு. வாடிக்கையாளரின் கோரிக்கைகளுக்கேற்ப சரியான காலக்கெடுவில் (periodicity) வசூல் செய்ய வேண்டிய வட்டி/டிவிடெண்ட் தொகைகளை வசூல் செய்ய வேண்டிய கடமை வங்கிக்கு உண்டு. இந்த செயல்பாட்டில் உண்டாகும் வங்கியின் தவறுகள் வாடிக்கையாளருக்கு ஏதேனும் இழப்பை ஏற்படுத்துமானால் அதை ஈடுகட்ட வேண்டிய கடமையும் வங்கிக்கு உண்டு. இதில் வங்கி வாடிக்கையாளரின் முகவராகவும் (Agent) செயலாற்றுகிறார்.
4. பங்கு வாங்க-விற்க மற்றும் இதர முதலீட்டு ஆலோசனைகள்/முகவர் சேவைகள்
இந்த உறவின் அடிப்படையில் வாடிக்கையாளருடைய சேமிப்பை சந்தையில் விற்பனைக்கு வரும் பங்குகளில் முதலீடு செய்யவும் அவற்றை தேவைப்படும்போதெல்லாம் பணமாக்கவும் வங்கி அவருடைய வாடிக்கையாளரின் முகவராகவும் ஆலோசகராகவும் பாதுகாப்பாளராகவும் செயல்படுகிறார். ஒரே சமயத்தில் பலவிதமான பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியிருப்பதால் இதில் திறன் வாய்ந்த அல்லது அனுபவம் நிறைந்த வங்கிகளே இத்தகைய சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.
மேற் கூறிய உறவுகள் அல்லாமல் மிகவும் அடிப்படையான வங்கி-வாடிக்கையாளர் சேவை ஒன்று உள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களுடைய கணக்குகளில் டெப்பாசிட் செய்யும் காசோலைகளை வசூல் செய்யும் முகவர் சேவை (Agency Service).
வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒரு வாடிக்கையாளர் தன்னுடைய வணிக, தொழில் தேவைகளுக்காக தன்னுடைய வாடிக்கையாளர்களிடமிருந்தோ அல்லது தன்னிடமிருந்து கடன் வாங்கியவர்களிடமிருந்தோ காசோலைகளை பெறுவது வாடிக்கை. அவர்கள் அனைவருமே வாடிக்கையாளர் செயல்படும் ஊரைச் சார்ந்தவர்களாகவே இருக்க வேண்டும் என்றில்லை. நாட்டின், ஏன் உலகின் பல பகுதிகளிலும் இருக்க வாய்ப்புள்ளது. அவர்கள் அனைவரும் வாடிக்கையாளருக்கு வழங்கும் காசோலைகளை (இது எந்த வடிவத்திலும் இருக்கலாம் Manager's Cheque, Pay Order, Demand Draft, etc) அவருடைய வங்கி கணக்கில் டெப்பாசிட் செய்வதன் மூலம் அவர் வங்கியை தன்னுடைய முகவராக அமர்த்துகிறார்.
ஒரு வங்கிக் கணக்கில் டெப்பாசிட் செய்யப்படும் காசோலைகளை பொறுப்புடன் கையாள வேண்டிய கடமை வங்கிக்கு உண்டு. உள்ளூரில் செயல்படும் வங்கி காசோலைகளை சாதாரணமாக அந்த நகரங்களில் செயல்படும் பட்டுவாடா மையங்களுக்கு (Clearing Centre) அனுப்பி வசூல் செய்வது வழக்கம்.
முன்பெல்லாம் வெளியூர்களில் செயல்படும் வங்கி காசோலைகளை அதே ஊரில் செயல்படும் தங்களுடைய கிளைகளுக்கோ அல்லது தங்களுடைய முகவர்களாக செயல்படும் வேறொரு வங்கிகளுக்கோ அனுப்பி வசூல் செய்வது வழக்கம். ஆனால் சமீபகாலமாக நாட்டின் முக்கிய பெருநகரங்களில் செயல்படும் வங்கி கிளைகளுக்கும் பொதுவாக பட்டுவாடா மையங்கள் (National Clearing Centre) செயல்படுகின்றன. இதனால் வசூலாக தேவைப்படும் நாட்கள் வெகுவாக குறைந்துள்ளன.
இத்தகைய பொது மையங்கள் இன்னும் செயல்பட துவங்காத இடங்களுக்கு அதே இடத்தில் செயல்படும் வேறொரு வங்கிக்கு காசோலைகள் அனுப்பப்பட்டு வசூல் செய்யப்படுகின்றன. ஒரு வங்கி வழங்கிய காசோலையை ஏன் வேறொரு வங்கிக்கு வசூலுக்காக அனுப்பபடுகிறது என்ற கேள்வி எழலாம். இது ஒரு தற்காப்புக்காகத்தான். ஒரு குறிப்பிட்ட வங்கியுடைய காசோலையை அதே வங்கிக்கு வசூல் செய்ய அனுப்பினால் வாடிக்கையாளரின் கணக்கில் போதிய தொகை இல்லையென வைத்துக்கொள்வோம். அவர் அதை உடனே திருப்பியனுப்பாமல் வாடிக்கையாளர் பணத்தை செலுத்தும் வரை காத்திருக்கக் கூடும். இதனால் வாடிக்கையாளரின் நேரம் விரையமாகக் கூடும். ஆனால் அந்த காசோலையை அதே ஊரிலுள்ள வேறொரு வங்கிக்கு அனுப்பினால் அது அந்த ஊரில் செயல்படும் பட்டுவாடா மையத்திற்குத்தான் அந்த காசோலையை வசூலுக்கு அனுப்புவார். அப்போது கணக்கில் பணம் இல்லாத சூழலில் உடனே வசூல் மையத்திற்கு திருப்பியனுப்பியாக வேண்டும். இத்தகைய முறையில் வசூல் செய்து தரும் வங்கிக்கும் சிறிது கட்டணம் செலுத்த வேண்டியிருந்தாலும் இதுவே பாதுகாப்பான முறை.
தொடரும்..
இந்த உறவில் வாடிக்கையாளருக்கு சொந்தமான சொத்துக்கள் (பெரும்பாலும் பத்திரங்கள், பங்குகள், ஆவணங்கள்) வங்கியிடம் பாதுகாப்புக்காக அளிக்கபடுகின்றன.
பாதுகாப்பு பெட்டக வசதிகளிலிருந்து இது எந்த வகையில் மாறுபடுகிறது என்ற கேள்வி எழலாம். பாதுகாப்பு பெட்டக வசதி வழங்கப்படும்போது அதில் என்ன வைக்கப்படுகிறது என வங்கிக்கு தெரிவதில்லை. பெட்டகம் மட்டுமே வாடகைக்கு வழங்கப்படுகிறது.
ஆனாக் இந்த டிரஸ்டி (Trustee) உறவில் வாடிக்கையாளர் தன்னுடைய சொத்தின் விவரத்தை அதாவது வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டிய சொத்தின் பட்டியலை அதற்குறிய படிவத்துடன் (Safe Security Deposits Form) வழங்குகிறார். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்களுடன் டெப்பாசிட் செய்யப்படும் ஆவணங்களை சரிபார்த்தபிறகே அவற்றை பாதுகாப்புக்காக பெற்றுக்கொண்ட சான்றிதழை வங்கி வழங்குகிறது. பாதுகாப்புக்கென வைக்கப்பட்ட பத்திரங்கள்/ஆவணங்கள் எவ்வாறு கையாளப்பட வேண்டும், எவ்வாறு திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்பவற்றை வாடிக்கையாளர் தன்னுடைய டெப்பாசிட் படிவத்தில் குறிப்பிட்டுள்ளபடி வங்கி கையாளவோ திருப்பிக்கொடுக்கவோ வேண்டும். இந்த உறவில் வங்கி ஒரு பொறுப்புள்ள பாதுகாப்பாளராக (Trustee) செயல்படுகிறார்.
சில சமயங்களில் வாடிக்கையாளர் டெப்பாசிட் செய்யப்பட்டுள்ள கடன் பத்திரங்களுக்குண்டான வட்டி அல்லது பங்குகளுக்கான டிவிடெண்ட் தொகை ஆகியவற்றை வசூல் செய்யும் உரிமையையும் வங்கிகளுக்கு வழங்குவதுண்டு. வாடிக்கையாளரின் கோரிக்கைகளுக்கேற்ப சரியான காலக்கெடுவில் (periodicity) வசூல் செய்ய வேண்டிய வட்டி/டிவிடெண்ட் தொகைகளை வசூல் செய்ய வேண்டிய கடமை வங்கிக்கு உண்டு. இந்த செயல்பாட்டில் உண்டாகும் வங்கியின் தவறுகள் வாடிக்கையாளருக்கு ஏதேனும் இழப்பை ஏற்படுத்துமானால் அதை ஈடுகட்ட வேண்டிய கடமையும் வங்கிக்கு உண்டு. இதில் வங்கி வாடிக்கையாளரின் முகவராகவும் (Agent) செயலாற்றுகிறார்.
4. பங்கு வாங்க-விற்க மற்றும் இதர முதலீட்டு ஆலோசனைகள்/முகவர் சேவைகள்
இந்த உறவின் அடிப்படையில் வாடிக்கையாளருடைய சேமிப்பை சந்தையில் விற்பனைக்கு வரும் பங்குகளில் முதலீடு செய்யவும் அவற்றை தேவைப்படும்போதெல்லாம் பணமாக்கவும் வங்கி அவருடைய வாடிக்கையாளரின் முகவராகவும் ஆலோசகராகவும் பாதுகாப்பாளராகவும் செயல்படுகிறார். ஒரே சமயத்தில் பலவிதமான பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியிருப்பதால் இதில் திறன் வாய்ந்த அல்லது அனுபவம் நிறைந்த வங்கிகளே இத்தகைய சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.
மேற் கூறிய உறவுகள் அல்லாமல் மிகவும் அடிப்படையான வங்கி-வாடிக்கையாளர் சேவை ஒன்று உள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களுடைய கணக்குகளில் டெப்பாசிட் செய்யும் காசோலைகளை வசூல் செய்யும் முகவர் சேவை (Agency Service).
வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒரு வாடிக்கையாளர் தன்னுடைய வணிக, தொழில் தேவைகளுக்காக தன்னுடைய வாடிக்கையாளர்களிடமிருந்தோ அல்லது தன்னிடமிருந்து கடன் வாங்கியவர்களிடமிருந்தோ காசோலைகளை பெறுவது வாடிக்கை. அவர்கள் அனைவருமே வாடிக்கையாளர் செயல்படும் ஊரைச் சார்ந்தவர்களாகவே இருக்க வேண்டும் என்றில்லை. நாட்டின், ஏன் உலகின் பல பகுதிகளிலும் இருக்க வாய்ப்புள்ளது. அவர்கள் அனைவரும் வாடிக்கையாளருக்கு வழங்கும் காசோலைகளை (இது எந்த வடிவத்திலும் இருக்கலாம் Manager's Cheque, Pay Order, Demand Draft, etc) அவருடைய வங்கி கணக்கில் டெப்பாசிட் செய்வதன் மூலம் அவர் வங்கியை தன்னுடைய முகவராக அமர்த்துகிறார்.
ஒரு வங்கிக் கணக்கில் டெப்பாசிட் செய்யப்படும் காசோலைகளை பொறுப்புடன் கையாள வேண்டிய கடமை வங்கிக்கு உண்டு. உள்ளூரில் செயல்படும் வங்கி காசோலைகளை சாதாரணமாக அந்த நகரங்களில் செயல்படும் பட்டுவாடா மையங்களுக்கு (Clearing Centre) அனுப்பி வசூல் செய்வது வழக்கம்.
முன்பெல்லாம் வெளியூர்களில் செயல்படும் வங்கி காசோலைகளை அதே ஊரில் செயல்படும் தங்களுடைய கிளைகளுக்கோ அல்லது தங்களுடைய முகவர்களாக செயல்படும் வேறொரு வங்கிகளுக்கோ அனுப்பி வசூல் செய்வது வழக்கம். ஆனால் சமீபகாலமாக நாட்டின் முக்கிய பெருநகரங்களில் செயல்படும் வங்கி கிளைகளுக்கும் பொதுவாக பட்டுவாடா மையங்கள் (National Clearing Centre) செயல்படுகின்றன. இதனால் வசூலாக தேவைப்படும் நாட்கள் வெகுவாக குறைந்துள்ளன.
இத்தகைய பொது மையங்கள் இன்னும் செயல்பட துவங்காத இடங்களுக்கு அதே இடத்தில் செயல்படும் வேறொரு வங்கிக்கு காசோலைகள் அனுப்பப்பட்டு வசூல் செய்யப்படுகின்றன. ஒரு வங்கி வழங்கிய காசோலையை ஏன் வேறொரு வங்கிக்கு வசூலுக்காக அனுப்பபடுகிறது என்ற கேள்வி எழலாம். இது ஒரு தற்காப்புக்காகத்தான். ஒரு குறிப்பிட்ட வங்கியுடைய காசோலையை அதே வங்கிக்கு வசூல் செய்ய அனுப்பினால் வாடிக்கையாளரின் கணக்கில் போதிய தொகை இல்லையென வைத்துக்கொள்வோம். அவர் அதை உடனே திருப்பியனுப்பாமல் வாடிக்கையாளர் பணத்தை செலுத்தும் வரை காத்திருக்கக் கூடும். இதனால் வாடிக்கையாளரின் நேரம் விரையமாகக் கூடும். ஆனால் அந்த காசோலையை அதே ஊரிலுள்ள வேறொரு வங்கிக்கு அனுப்பினால் அது அந்த ஊரில் செயல்படும் பட்டுவாடா மையத்திற்குத்தான் அந்த காசோலையை வசூலுக்கு அனுப்புவார். அப்போது கணக்கில் பணம் இல்லாத சூழலில் உடனே வசூல் மையத்திற்கு திருப்பியனுப்பியாக வேண்டும். இத்தகைய முறையில் வசூல் செய்து தரும் வங்கிக்கும் சிறிது கட்டணம் செலுத்த வேண்டியிருந்தாலும் இதுவே பாதுகாப்பான முறை.
தொடரும்..
Thursday, August 19, 2010
வங்கியுலகம் 5 வங்கி வழங்கும் பிற சேவைகள்
வங்கி-வாடிக்கையாளர் உறவு வாடிக்கையாளரின் சேமிப்பை இட்டு வைக்கவும் கடன் பெறவும் என்கிற உறவுடன் நின்றுவிடுவதில்லை.
இந்த அடிப்படை உறவைக் கடந்து இன்று முப்பது வருடங்களுக்கு முன்பு கனவிலும் நினைத்துப் பார்த்திராத சேவைகளை இன்று பல வங்கிகளும் வழங்குகின்றன. அன்று, அதாவது எண்பதுகளில், பல வங்கிகளில் தங்களுடைய பாதுகாப்பு பெட்டக வசதியை விளம்பரப்படுத்தி தாங்கள் வழங்கிய வங்கி சேவைகள் மற்ற வங்கிகளைக் காட்டிலும் பிரத்தியேகமானவை என தம்பட்டம் அடித்துக்கொண்டன.
ஆனால் இன்று இதுதான் இல்லை என ஒரு வாடிக்கையாளரின் அனைத்து தேவைகளையும் சேவையாக வழங்குகின்றன என்றால் மிகையாகாது.
அவற்றில் சில முக்கியமானவற்றை இங்கு பட்டியலிட்டுள்ளேன்.
1. பாதுகாப்பு பெட்டகங்கள்.
2. கடன் பத்திரங்கள், பங்குகள், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை பாதுகாத்து வைத்தல்,
2. பங்கு வாங்க-விற்க வசதி.
3. பங்குகளில், பிற சொத்துகளில் முதலீடு செய்ய ஆலோசனை.
4. ஏஜன்சி வசதிகள் (அனைத்து பயண சீட்டுகளையும் பெற்று தருதல், விடுதி, போக்குவரத்து ஏற்பாடுகள், காப்பீட்டு தவணை தொகையை குறிப்பிட்ட தியதிகளில் செலுத்துதல், என பல சேவைகள்)
5. வீடு, வாகனங்கள் வாங்க கடனுடன் சேர்த்து ஆலோசனைகள்
6. அன்னிய செலவாணி விற்க-வாங்க
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இத்தகைய உறவுகள் ஒவ்வொன்றுக்கும் பிரத்தியேக நிபந்தனைகள் (Conditions), கடமைகள்(Responsibilities), உரிமைகள் (Rights) உள்ளன.
அவை சேமிப்பு அல்லது கடன் கணக்கு வைத்திருக்கும் ஒரு வாடிக்கையாளர் வங்கியுடன் வைத்துள்ள Debtor-Creditor உறவிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை.
1. பாதுகாப்பு பெட்டகங்கள் வசதி
இந்த சேவையில் பாதுகாப்பு பெட்டகங்கள் (Safe Deposit Lockers) வாடிக்கையாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வாடகையாக மட்டுமே வழங்கப் படுகின்றன. அதாவது ஒரு வீட்டு உரிமையாளர்-வாடகைதாரர் ஆகியவர்களுக்கு இடையில் என்ன உறவை சட்டம் ஏற்படுத்துகிறதோ அதுபோன்ற உறவு இது. ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கும் வாடகைதாரர் அந்த வீட்டை தனியாகவோ தன்னுடைய குடும்பத்தினருடனோ வசிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தலாம் என்றும் எந்த ஒரு சூழலிலும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளுக்காக தன்னுடைய வீட்டை பயன்படுத்தலாகாது என வீட்டு உரிமையாளர் நிபந்தனை விதித்திருந்தால் அந்த பயனுக்காக மட்டுமே வாடகைதாரர் வீட்டை பயன்படுத்த முடியும் அல்லவா? அதுபோலத்தான் இத்தகைய வங்கி-வாடிக்கையாளர் உறவும். வாடிக்கையாளர் வாடகைக்கு எடுத்துள்ள பெட்டகத்தை சட்டத்துக்கு புறம்பான எந்த தேவைக்காகவும் பயன்படுத்தலாகாது.
மேலும் வாடகை வீட்டில் குடியிருக்கும் வாடகைதாரரின் பொருட்களுக்கு எப்படி வீட்டு உரிமையாளர் பொறுப்பாக மாட்டாரோ அதுபோன்றே வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும் எந்த பொருளுக்கும் வங்கி பொறுப்பாகாது. ஏனெனில் வாடகைதாரர் எந்த பொருளை பெட்டகத்தில் வைக்கிறார் என்பதை வங்கிக்கு தெரிவிப்பதில்லையே. அப்படியே அவர் தெரிவித்தாலும் அதை கருத்தில் கொள்ள வேண்டிய தேவை வங்கிக்கு இல்லை. ஆகவே பெட்டகத்தில் வைக்கப்பட்ட பொருள் சேதமடைந்தாலோ, களவு போனாலோ அதற்கு எந்த விதத்திலும் வங்கி பொறுப்பாகாது.
வாடகைக் காலம் முடிந்ததும் மீண்டும் வீட்டை அதே வாடகைதாரருக்கு வாடகைக்கு விடவேண்டும் என்கிற நிர்பந்தம் வீட்டு உரிமையாளருக்கு இல்லையல்லவா? அதுபோன்றே வாடகைக்கு விட்ட பெட்டகத்தை வருடா வருடம் புதுப்பிக்க வேண்டும் என்கிற கட்டாயம் வங்கிகளுக்கு இல்லை. தேவைப்பட்டால் அதை காலி செய்ய கூறும் உரிமையும் வங்கிகளுக்கு உண்டு.
இந்த உறவிலுள்ள ஒப்பந்ததாரர்களுக்கு உள்ள கடமைகள் என்னென்ன?
வங்கி
1. பாதுகாப்பு பெட்டகம் அடங்கிய இரும்பு அலமாரியை (Iron Safe) சரிவர பராமரிப்பது. வங்கியின் சரியான பராமரிப்பின்மையால் பெட்டகத்தினுள் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் சேதமடையும் பட்சத்தில் வாடகைதாரருக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய வேண்டும் அதாவது லாக்கருக்குள் உள்ள ஈரப்பதம் காரணமாக பெட்டகத்தில் வைக்கப்பட்ட ஆவணங்கள் ஏதேனும் கரையான் அரிப்பால் சேதப்பட்டுவிட்டது என்பது நிரூபிக்கப்படுமானால் வங்கி இழப்பை ஈடு செய்ய வேண்டும்.
2. பாதுகாப்பு பெட்டகத்தை வாடகைதாரர் சிரமமில்லாமல் பயன்படுத்த தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும். இன்று பல வங்கிகளும் இவற்றை தனி அறைகளில் அமைப்பதுடன் வாடகைதாரர்கள் அமர்ந்து பெட்டகத்திலுள்ள பொருட்களை எடுத்து சரிபார்க்க ஏதுவாக பிரத்தியேக மேசை, நாற்காலி, மின் விசிறி, குளிர்சாதன வசதிகள் ஆகியவற்றை செய்துக்கொடுத்துள்ளன.
வாடிக்கையாளர்
1. பாதுகாப்பு பெட்டகத்திற்கான திறவுகோல், கடவுச்சொல் (password) ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அவை களவுபோகும் பட்சத்தில் வங்கிக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும். (பெட்டகத்தின் திறவுகோல் வாடகைதாரர் தவறவிடும் பட்சத்தில் புதிய திறவுகோலை வங்கி ஏற்பாடு செய்ய தேவையான அனைத்து சிலவினங்களையும் வாடகைதாரரே ஏற்றுக்கொள்ள வேண்டும்)
2. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுதல்.
உரிமைகள்
வங்கி
1. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குட்படாத தேவைகளுக்காக பெட்டகம் பயன்படுத்தப்படும் பட்சத்தில் அதை உடனடியாக காலி செய்ய கூற முடியும்.
2. வாடகைதாரரின் வரி நிலுவைகளுக்காகவோ அல்லது அரசாங்க இலாக்காக்கள் சட்டத்தை அமுல்படுத்தவோ அவருடைய பெட்டகத்தை அவருடைய விருப்பத்துடனோ அல்லது இல்லாமலோ திறக்க உரிமையுண்டு. ஆனால் திறக்கப்படுவதற்கு முன்போ அல்லது அதற்குப் பிறகோ சம்பந்தப்பட்ட வாடகைதாரருக்கு அதை தெரியப்படுத்துவது வங்கியின் கடமையாகும்.
3. பெட்டகத்திற்குறிய வாடகை நிலுவையில் நிற்கும் பட்சத்தில் அதை வசூலிக்க பெட்டகத்தை வாடகைதாரருக்கு தெரிவித்துவிட்டு திறக்கும் உரிமை வங்கிக்கு உண்டு.
வாடகைதாரர்
1. ஒப்பந்தத்திலுள்ள நிபந்தனைகளை மீறாதிருக்கும் பட்சத்தில் பெட்டகத்தை தன்னுடைய எத்தகைய தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ள உரிமையுண்டு.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களும் சில உள்ளன.
1. பெட்டகத்தில் வைக்கப்படும் பொருட்கள் எதன் மீதும் வங்கிக்கு எவ்வித உரிமையும் இல்லை. அதாவது வாடகைதாரரின் கடன் கணக்கு நிலுவையில் நிற்கும் பட்சத்தில் அதை வசூலிக்க பெட்டகத்திலுள்ள அவருடைய சொத்துக்களை முடக்கி வைக்கவோ அல்லது அவற்றின் மீது உரிமை கொள்ளவோ வங்கிக்கு உரிமையில்லை.
2. பெட்டக பராமரிப்பில் வங்கியின் செயல்பாடுகளில் குறை இல்லாத பட்சத்தில் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் சேதமடைந்துவிட்டன அல்லது களவு போய்விட்டன என்று கூறி அதற்கு இழப்பீடு ஏதும் கோரும் உரிமை வாடகைதாரருக்கு இல்லை.
தொடரும்..
இந்த அடிப்படை உறவைக் கடந்து இன்று முப்பது வருடங்களுக்கு முன்பு கனவிலும் நினைத்துப் பார்த்திராத சேவைகளை இன்று பல வங்கிகளும் வழங்குகின்றன. அன்று, அதாவது எண்பதுகளில், பல வங்கிகளில் தங்களுடைய பாதுகாப்பு பெட்டக வசதியை விளம்பரப்படுத்தி தாங்கள் வழங்கிய வங்கி சேவைகள் மற்ற வங்கிகளைக் காட்டிலும் பிரத்தியேகமானவை என தம்பட்டம் அடித்துக்கொண்டன.
ஆனால் இன்று இதுதான் இல்லை என ஒரு வாடிக்கையாளரின் அனைத்து தேவைகளையும் சேவையாக வழங்குகின்றன என்றால் மிகையாகாது.
அவற்றில் சில முக்கியமானவற்றை இங்கு பட்டியலிட்டுள்ளேன்.
1. பாதுகாப்பு பெட்டகங்கள்.
2. கடன் பத்திரங்கள், பங்குகள், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை பாதுகாத்து வைத்தல்,
2. பங்கு வாங்க-விற்க வசதி.
3. பங்குகளில், பிற சொத்துகளில் முதலீடு செய்ய ஆலோசனை.
4. ஏஜன்சி வசதிகள் (அனைத்து பயண சீட்டுகளையும் பெற்று தருதல், விடுதி, போக்குவரத்து ஏற்பாடுகள், காப்பீட்டு தவணை தொகையை குறிப்பிட்ட தியதிகளில் செலுத்துதல், என பல சேவைகள்)
5. வீடு, வாகனங்கள் வாங்க கடனுடன் சேர்த்து ஆலோசனைகள்
6. அன்னிய செலவாணி விற்க-வாங்க
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இத்தகைய உறவுகள் ஒவ்வொன்றுக்கும் பிரத்தியேக நிபந்தனைகள் (Conditions), கடமைகள்(Responsibilities), உரிமைகள் (Rights) உள்ளன.
அவை சேமிப்பு அல்லது கடன் கணக்கு வைத்திருக்கும் ஒரு வாடிக்கையாளர் வங்கியுடன் வைத்துள்ள Debtor-Creditor உறவிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை.
1. பாதுகாப்பு பெட்டகங்கள் வசதி
இந்த சேவையில் பாதுகாப்பு பெட்டகங்கள் (Safe Deposit Lockers) வாடிக்கையாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வாடகையாக மட்டுமே வழங்கப் படுகின்றன. அதாவது ஒரு வீட்டு உரிமையாளர்-வாடகைதாரர் ஆகியவர்களுக்கு இடையில் என்ன உறவை சட்டம் ஏற்படுத்துகிறதோ அதுபோன்ற உறவு இது. ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கும் வாடகைதாரர் அந்த வீட்டை தனியாகவோ தன்னுடைய குடும்பத்தினருடனோ வசிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தலாம் என்றும் எந்த ஒரு சூழலிலும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளுக்காக தன்னுடைய வீட்டை பயன்படுத்தலாகாது என வீட்டு உரிமையாளர் நிபந்தனை விதித்திருந்தால் அந்த பயனுக்காக மட்டுமே வாடகைதாரர் வீட்டை பயன்படுத்த முடியும் அல்லவா? அதுபோலத்தான் இத்தகைய வங்கி-வாடிக்கையாளர் உறவும். வாடிக்கையாளர் வாடகைக்கு எடுத்துள்ள பெட்டகத்தை சட்டத்துக்கு புறம்பான எந்த தேவைக்காகவும் பயன்படுத்தலாகாது.
மேலும் வாடகை வீட்டில் குடியிருக்கும் வாடகைதாரரின் பொருட்களுக்கு எப்படி வீட்டு உரிமையாளர் பொறுப்பாக மாட்டாரோ அதுபோன்றே வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும் எந்த பொருளுக்கும் வங்கி பொறுப்பாகாது. ஏனெனில் வாடகைதாரர் எந்த பொருளை பெட்டகத்தில் வைக்கிறார் என்பதை வங்கிக்கு தெரிவிப்பதில்லையே. அப்படியே அவர் தெரிவித்தாலும் அதை கருத்தில் கொள்ள வேண்டிய தேவை வங்கிக்கு இல்லை. ஆகவே பெட்டகத்தில் வைக்கப்பட்ட பொருள் சேதமடைந்தாலோ, களவு போனாலோ அதற்கு எந்த விதத்திலும் வங்கி பொறுப்பாகாது.
வாடகைக் காலம் முடிந்ததும் மீண்டும் வீட்டை அதே வாடகைதாரருக்கு வாடகைக்கு விடவேண்டும் என்கிற நிர்பந்தம் வீட்டு உரிமையாளருக்கு இல்லையல்லவா? அதுபோன்றே வாடகைக்கு விட்ட பெட்டகத்தை வருடா வருடம் புதுப்பிக்க வேண்டும் என்கிற கட்டாயம் வங்கிகளுக்கு இல்லை. தேவைப்பட்டால் அதை காலி செய்ய கூறும் உரிமையும் வங்கிகளுக்கு உண்டு.
இந்த உறவிலுள்ள ஒப்பந்ததாரர்களுக்கு உள்ள கடமைகள் என்னென்ன?
வங்கி
1. பாதுகாப்பு பெட்டகம் அடங்கிய இரும்பு அலமாரியை (Iron Safe) சரிவர பராமரிப்பது. வங்கியின் சரியான பராமரிப்பின்மையால் பெட்டகத்தினுள் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் சேதமடையும் பட்சத்தில் வாடகைதாரருக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய வேண்டும் அதாவது லாக்கருக்குள் உள்ள ஈரப்பதம் காரணமாக பெட்டகத்தில் வைக்கப்பட்ட ஆவணங்கள் ஏதேனும் கரையான் அரிப்பால் சேதப்பட்டுவிட்டது என்பது நிரூபிக்கப்படுமானால் வங்கி இழப்பை ஈடு செய்ய வேண்டும்.
2. பாதுகாப்பு பெட்டகத்தை வாடகைதாரர் சிரமமில்லாமல் பயன்படுத்த தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும். இன்று பல வங்கிகளும் இவற்றை தனி அறைகளில் அமைப்பதுடன் வாடகைதாரர்கள் அமர்ந்து பெட்டகத்திலுள்ள பொருட்களை எடுத்து சரிபார்க்க ஏதுவாக பிரத்தியேக மேசை, நாற்காலி, மின் விசிறி, குளிர்சாதன வசதிகள் ஆகியவற்றை செய்துக்கொடுத்துள்ளன.
வாடிக்கையாளர்
1. பாதுகாப்பு பெட்டகத்திற்கான திறவுகோல், கடவுச்சொல் (password) ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அவை களவுபோகும் பட்சத்தில் வங்கிக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும். (பெட்டகத்தின் திறவுகோல் வாடகைதாரர் தவறவிடும் பட்சத்தில் புதிய திறவுகோலை வங்கி ஏற்பாடு செய்ய தேவையான அனைத்து சிலவினங்களையும் வாடகைதாரரே ஏற்றுக்கொள்ள வேண்டும்)
2. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுதல்.
உரிமைகள்
வங்கி
1. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குட்படாத தேவைகளுக்காக பெட்டகம் பயன்படுத்தப்படும் பட்சத்தில் அதை உடனடியாக காலி செய்ய கூற முடியும்.
2. வாடகைதாரரின் வரி நிலுவைகளுக்காகவோ அல்லது அரசாங்க இலாக்காக்கள் சட்டத்தை அமுல்படுத்தவோ அவருடைய பெட்டகத்தை அவருடைய விருப்பத்துடனோ அல்லது இல்லாமலோ திறக்க உரிமையுண்டு. ஆனால் திறக்கப்படுவதற்கு முன்போ அல்லது அதற்குப் பிறகோ சம்பந்தப்பட்ட வாடகைதாரருக்கு அதை தெரியப்படுத்துவது வங்கியின் கடமையாகும்.
3. பெட்டகத்திற்குறிய வாடகை நிலுவையில் நிற்கும் பட்சத்தில் அதை வசூலிக்க பெட்டகத்தை வாடகைதாரருக்கு தெரிவித்துவிட்டு திறக்கும் உரிமை வங்கிக்கு உண்டு.
வாடகைதாரர்
1. ஒப்பந்தத்திலுள்ள நிபந்தனைகளை மீறாதிருக்கும் பட்சத்தில் பெட்டகத்தை தன்னுடைய எத்தகைய தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ள உரிமையுண்டு.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களும் சில உள்ளன.
1. பெட்டகத்தில் வைக்கப்படும் பொருட்கள் எதன் மீதும் வங்கிக்கு எவ்வித உரிமையும் இல்லை. அதாவது வாடகைதாரரின் கடன் கணக்கு நிலுவையில் நிற்கும் பட்சத்தில் அதை வசூலிக்க பெட்டகத்திலுள்ள அவருடைய சொத்துக்களை முடக்கி வைக்கவோ அல்லது அவற்றின் மீது உரிமை கொள்ளவோ வங்கிக்கு உரிமையில்லை.
2. பெட்டக பராமரிப்பில் வங்கியின் செயல்பாடுகளில் குறை இல்லாத பட்சத்தில் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் சேதமடைந்துவிட்டன அல்லது களவு போய்விட்டன என்று கூறி அதற்கு இழப்பீடு ஏதும் கோரும் உரிமை வாடகைதாரருக்கு இல்லை.
தொடரும்..
Labels:
அனுபவம்,
வங்கி பரிவர்த்தனைகள்
Location:
Chennai, Tamil Nadu, India
Monday, August 9, 2010
வங்கியுலகம் 4 வங்கி-வாடிக்கையாளர் உறவு
ஒருவர் வங்கியில் கணக்கை துவங்கிய நாள் முதலே அந்த வங்கியின் வாடிக்கையாளராகிவிடுகிறார் என்கின்றன சில சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள். ஆனால் ஒரு வாடிக்கையாளர் என அழைக்கப்படுவதற்கு அவர் 'வாடிக்கையாக' அந்த வங்கியில் உள்ள கணக்கில் வரவு-செலவு வைத்திருக்க வேண்டும் என்பதுதான் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட நியதி. ஒருவர் வாடிக்கையாக அதாவது வழக்கமாக (சில காலத்திற்காவது) ஒரு நிறுவனத்துடன் தொடர்பு அல்லது உறவு வைத்திருந்தால்தானே அவர் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் என கருதப்பட முடியும்? அதுபோலத்தான் வங்கி-வாடிக்கையாளர் உறவும் தீர்மானிக்கப்படுகிறது.
அத்தகைய வாடிக்கையாளரின் கணக்கில் அவருக்கு சாதகமான இருப்பு (Credit Balance) இருக்கும்வரையிலும் அவர் அந்த வங்கிக்கு கடன் வழங்கியவராக (Creditor) ஆக கருதப்படுகிறார். அதே கணக்கில் இருப்பு அவருக்கு பாதகமாக அல்லது கடனாக மாறும்போது (Debit Balance) அவர் வங்கியின் கடனாளியாக (Debtor) கருதப்படுகிறார். இப்போது சில குறிப்பிட்ட கணக்குகளில் '0' இருப்பு வைத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. அதாவது வாடிக்கையாளர் கடன் வழங்கியவராகவும் இல்லாமல் கடனாளியாகவும் இல்லாமல் இருப்பார். இத்தகைய கணக்குகள் பெரும்பாலும் சிறுவர்கள் பெயரில் (குறிப்பாக மாணவர்கள்) மட்டுமே துவங்க அனுமதிக்கப்படுகின்றது.
வங்கி-வாடிக்கையாளர் உறவின் சிறப்பம்சம்
இது மற்ற கடனாளி-கடன் வழங்கியவர் உறவுகள்போல் கருதப்படுவதில்லை. சாதாரணமாக, வங்கியல்லாத தனிநபர் அல்லது நிறுவனங்களிலிருந்து கடன் பெறும் ஒருவர் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்தவுடன் கடன் வழங்கியவர் கேட்காமலேயே பணத்தை திருப்பி செலுத்திவிட வேண்டும். 'நீ கேட்கவில்லை ஆகவே நானும் திருப்பி கொடுக்கவில்லை' என்று வாங்கிய பணத்தை திருப்பி செலுத்தாமல் இருக்க முடியாது. மேலும் கடனாளி குறிப்பிட்ட காலக்கெடு முடிவடையும் முன்பே தாமாகவே கடனை திருப்பி செலுத்தவும் முன்வரலாம். அப்போது 'நான் கடனை திருப்பி பெற்றுக்கொள்ள மாட்டேன்' என மறுதலிக்க கடன் வழங்கியவருக்கு உரிமையில்லை. கடனை திருப்பி செலுத்த காலக்கெடு ஏதும் குறிப்பிடாத பட்சத்தில் கடன் கொடுத்தவர் கேட்டவுடனே கடனாளி பணத்தை திருப்பி செலுத்த வேண்டியிருக்கும்.
ஆனால் வங்கி-வாடிக்கையாளர் உறவில் கடன் பெற்ற வங்கி தாமாகவே முன்வந்து பணத்தை திருப்பி செலுத்தவேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. ஏனெனில் சில வைப்பு நிதி கணக்குகளை தவிர மற்ற வங்கி கணக்குகள் அனைத்துமே வரவும் செலவும் (Debit & Credit) செய்யக்கூடிய கணக்குகளே. அதாவது ஒரே கணக்கில் பணம் செலுத்தவோ அல்லது அதிலிருந்து பணத்தை தேவைப்படும்போதெல்லாம் எடுக்கவோ முடிகிறது. தனிநபர்கள் தங்களுடைய ஊதியத்தையோ அல்லது சேமிப்பையோ வங்கிகளில் செலுத்த சேமிப்பு கணக்குகளையும் (Savings Accounts) நிறுவனங்கள் தங்களுடைய தொழில் மற்றும் வணிக வரவு-செலவு பரிவர்த்தனைகளை செய்ய வணிக கணக்குகளும் (Current Accounts) அனுமதிக்கப்படுகின்றனர். ஆகவே வங்கியின் சில சட்டதிட்டங்களுக்குட்பட்டு மட்டுமே இத்தகைய கணக்கிலுள்ள இருப்பிலிருந்து தங்களுக்கு தேவையான தொகையை வாடிக்கையாளர்கள் எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
ஒரு வாடிக்கையாளர் தன்னுடைய கணக்கிலுள்ள இருப்பிலிருந்து பணத்தை எடுக்க சில சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே எடுக்க முடியும் என்று கூறினேன்.
அவை என்னென்ன?
1. இடம்: வங்கியின் எந்த கிளையில் அவர் கணக்கு வைத்திருக்கிறாரோ அந்த கிளையிடம் மட்டுமே அவர் தன்னுடைய பணத்தை கோரமுடியும். (இந்த நிபந்தனை தற்போது பல வங்கிகளிலும் நடைமுறையில் இல்லை என்று கூறலாம். ஏனெனில் CBS எனப்படும் மென்பொருள் வழியாக ஒரு வங்கியின் அனைத்து கிளைகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ஆயினும் அவருக்கு வழங்கப்படும் தொகை அவர் எந்த கிளையில் கணக்கு வைத்திருக்கிறாரோ அந்த கிளையின் (Parent Branch) சார்பாக மட்டுமே அதே வங்கியின் வேறொரு கிளை (Paying Branch) வழங்குகிறது. இதிலும் ஒரு வாடிக்கையாளரால் ஒரு குறிப்பிட்ட தொகை வரை மட்டுமே தன்னுடைய கிளை அல்லாது கிளையிலிருந்து எடுக்க முடிகிறது).
2. முறை: வங்கியிலிருந்து வழங்கப்பட்டுள்ள காசோலையை பயன்படுத்தி மட்டுமே பணம் எடுக்க முடியும். (இந்த நிபந்தனையும் தற்போது அதாவது ATM இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து தளர்த்தப்பட்டுவிட்டது. ஆனாலும் ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே இத்தகைய முறையில் எடுக்க முடிகிறது)
3. தொகை: எடுக்கப்பட வேண்டிய தொகை தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஒரு வாடிக்கையாளர் தனக்கு இவ்வளவு தொகை வேண்டும் என தெளிவாக தெரிவிக்க வேண்டும். தோராயாமாக (உ.ம்) 'எவ்வளவு முடியுமோ' அல்லது 'கணக்கில் எவ்வளவு இருப்பு இருக்கிறதோ அவ்வளவு' என்றெல்லாம் காசோலையில் குறிப்பிடலாகாது.
4. பணம் பெறும் முறை: காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை யாருக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வாடிக்கையாளர் விரும்பினால் ஒரு குறிப்பிட்ட தொகை வரை 'பேரர்' காசோலையாகவும் ('காசோலை கொண்டு வருபவருக்கு') வழங்கலாம்.
5. நாள்: காசோலை ஒரு குறிப்பிட்ட தியதியிட்டு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது 'நாளைக்கு' அல்லது 'வருகின்ற வாரத்தில் ஒரு நாள்' என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கலாகாது.
தொடரும்..
அத்தகைய வாடிக்கையாளரின் கணக்கில் அவருக்கு சாதகமான இருப்பு (Credit Balance) இருக்கும்வரையிலும் அவர் அந்த வங்கிக்கு கடன் வழங்கியவராக (Creditor) ஆக கருதப்படுகிறார். அதே கணக்கில் இருப்பு அவருக்கு பாதகமாக அல்லது கடனாக மாறும்போது (Debit Balance) அவர் வங்கியின் கடனாளியாக (Debtor) கருதப்படுகிறார். இப்போது சில குறிப்பிட்ட கணக்குகளில் '0' இருப்பு வைத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. அதாவது வாடிக்கையாளர் கடன் வழங்கியவராகவும் இல்லாமல் கடனாளியாகவும் இல்லாமல் இருப்பார். இத்தகைய கணக்குகள் பெரும்பாலும் சிறுவர்கள் பெயரில் (குறிப்பாக மாணவர்கள்) மட்டுமே துவங்க அனுமதிக்கப்படுகின்றது.
வங்கி-வாடிக்கையாளர் உறவின் சிறப்பம்சம்
இது மற்ற கடனாளி-கடன் வழங்கியவர் உறவுகள்போல் கருதப்படுவதில்லை. சாதாரணமாக, வங்கியல்லாத தனிநபர் அல்லது நிறுவனங்களிலிருந்து கடன் பெறும் ஒருவர் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்தவுடன் கடன் வழங்கியவர் கேட்காமலேயே பணத்தை திருப்பி செலுத்திவிட வேண்டும். 'நீ கேட்கவில்லை ஆகவே நானும் திருப்பி கொடுக்கவில்லை' என்று வாங்கிய பணத்தை திருப்பி செலுத்தாமல் இருக்க முடியாது. மேலும் கடனாளி குறிப்பிட்ட காலக்கெடு முடிவடையும் முன்பே தாமாகவே கடனை திருப்பி செலுத்தவும் முன்வரலாம். அப்போது 'நான் கடனை திருப்பி பெற்றுக்கொள்ள மாட்டேன்' என மறுதலிக்க கடன் வழங்கியவருக்கு உரிமையில்லை. கடனை திருப்பி செலுத்த காலக்கெடு ஏதும் குறிப்பிடாத பட்சத்தில் கடன் கொடுத்தவர் கேட்டவுடனே கடனாளி பணத்தை திருப்பி செலுத்த வேண்டியிருக்கும்.
ஆனால் வங்கி-வாடிக்கையாளர் உறவில் கடன் பெற்ற வங்கி தாமாகவே முன்வந்து பணத்தை திருப்பி செலுத்தவேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. ஏனெனில் சில வைப்பு நிதி கணக்குகளை தவிர மற்ற வங்கி கணக்குகள் அனைத்துமே வரவும் செலவும் (Debit & Credit) செய்யக்கூடிய கணக்குகளே. அதாவது ஒரே கணக்கில் பணம் செலுத்தவோ அல்லது அதிலிருந்து பணத்தை தேவைப்படும்போதெல்லாம் எடுக்கவோ முடிகிறது. தனிநபர்கள் தங்களுடைய ஊதியத்தையோ அல்லது சேமிப்பையோ வங்கிகளில் செலுத்த சேமிப்பு கணக்குகளையும் (Savings Accounts) நிறுவனங்கள் தங்களுடைய தொழில் மற்றும் வணிக வரவு-செலவு பரிவர்த்தனைகளை செய்ய வணிக கணக்குகளும் (Current Accounts) அனுமதிக்கப்படுகின்றனர். ஆகவே வங்கியின் சில சட்டதிட்டங்களுக்குட்பட்டு மட்டுமே இத்தகைய கணக்கிலுள்ள இருப்பிலிருந்து தங்களுக்கு தேவையான தொகையை வாடிக்கையாளர்கள் எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
ஒரு வாடிக்கையாளர் தன்னுடைய கணக்கிலுள்ள இருப்பிலிருந்து பணத்தை எடுக்க சில சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே எடுக்க முடியும் என்று கூறினேன்.
அவை என்னென்ன?
1. இடம்: வங்கியின் எந்த கிளையில் அவர் கணக்கு வைத்திருக்கிறாரோ அந்த கிளையிடம் மட்டுமே அவர் தன்னுடைய பணத்தை கோரமுடியும். (இந்த நிபந்தனை தற்போது பல வங்கிகளிலும் நடைமுறையில் இல்லை என்று கூறலாம். ஏனெனில் CBS எனப்படும் மென்பொருள் வழியாக ஒரு வங்கியின் அனைத்து கிளைகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ஆயினும் அவருக்கு வழங்கப்படும் தொகை அவர் எந்த கிளையில் கணக்கு வைத்திருக்கிறாரோ அந்த கிளையின் (Parent Branch) சார்பாக மட்டுமே அதே வங்கியின் வேறொரு கிளை (Paying Branch) வழங்குகிறது. இதிலும் ஒரு வாடிக்கையாளரால் ஒரு குறிப்பிட்ட தொகை வரை மட்டுமே தன்னுடைய கிளை அல்லாது கிளையிலிருந்து எடுக்க முடிகிறது).
2. முறை: வங்கியிலிருந்து வழங்கப்பட்டுள்ள காசோலையை பயன்படுத்தி மட்டுமே பணம் எடுக்க முடியும். (இந்த நிபந்தனையும் தற்போது அதாவது ATM இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து தளர்த்தப்பட்டுவிட்டது. ஆனாலும் ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே இத்தகைய முறையில் எடுக்க முடிகிறது)
3. தொகை: எடுக்கப்பட வேண்டிய தொகை தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஒரு வாடிக்கையாளர் தனக்கு இவ்வளவு தொகை வேண்டும் என தெளிவாக தெரிவிக்க வேண்டும். தோராயாமாக (உ.ம்) 'எவ்வளவு முடியுமோ' அல்லது 'கணக்கில் எவ்வளவு இருப்பு இருக்கிறதோ அவ்வளவு' என்றெல்லாம் காசோலையில் குறிப்பிடலாகாது.
4. பணம் பெறும் முறை: காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை யாருக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வாடிக்கையாளர் விரும்பினால் ஒரு குறிப்பிட்ட தொகை வரை 'பேரர்' காசோலையாகவும் ('காசோலை கொண்டு வருபவருக்கு') வழங்கலாம்.
5. நாள்: காசோலை ஒரு குறிப்பிட்ட தியதியிட்டு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது 'நாளைக்கு' அல்லது 'வருகின்ற வாரத்தில் ஒரு நாள்' என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கலாகாது.
தொடரும்..
Labels:
அனுபவம்,
வங்கி பரிவர்த்தனைகள்
Location:
Chennai, Tamil Nadu, India
Saturday, August 7, 2010
வங்கியுலகம் 3 - வங்கி-வாடிக்கையாளர் உறவு!
முந்தைய இரண்டு பதிவுகளில் வங்கி என்றால் என்ன என்றும் சேமிப்பு என்றால் என்ன என்றும் சுருக்கமாக கூறியிருந்தேன்.
ஒரு வங்கியின் வாடிக்கையாளர்களுள் முக்கியமானவர்கள் சேமிப்பாளர்கள். இவர்களுள் எத்தனை வகை, இவர்களுடைய குணாதிசயங்களுக்கும் இவர்களுடைய சேமிப்பு முறைகளும் எத்தகையவை என்றும் கூறினேன்.
இந்த பதிவில் சேமிப்பாளர்களுக்கும் வங்கிகளுக்கும் இடையில் என்ன உறவு என்பதைப் பற்றி சுருக்கமாக கூறுகிறேன்.
ஒரு வங்கியின் கிளைக்குள் வந்து செல்லும் அனைவரையுமே வங்கியின் வாடிக்கையாளராக கருத முடியுமா?
அதற்கு முன்பு ஒருவர் எதற்காகவெல்லாம் வங்கிக்கு வந்து செல்கின்றார் என்று பார்ப்போம்.
1. தன்னுடைய சேமிப்பை பாதுகாத்து வைப்பதற்கு வங்கியில் ஒரு கணக்கை துவங்க அல்லது ஏற்கனவே துவங்கியுள்ள கணக்கில் மேலும் பணத்தை செலுத்த, அல்லது அதிலிருந்து தேவையான பணத்தை எடுக்க, அல்லது கணக்கை முடித்துக்கொள்ள.
2. வங்கியிலிருந்து தனக்கு தேவையான பணத்தை கடனாக பெற (இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதை பிறகு விவரமாக பார்ப்போம்)
3. வங்கியிலிருந்து பண ஓலைகளை வாங்க அல்லது மாற்றுவதற்கு (அது டிமாண்ட் ட்ராஃப்டாக இருக்கலாம், மேலாளர் காசோலை எனப்படும் Banker's Cheque அல்லது Pay Order ஆக இருக்கலாம்)
4. வெளியூரிலுள்ள தன்னுடைய வாடிக்கையாளர், நண்பர், உறவினர் ஆகியோருக்கு தந்தி மூலம் பணம் அனுப்புவதற்கு
5. வங்கியில் பாதுகாப்பு பெட்டகம் ஒன்றை வாடகைக்கு எடுக்க என
இப்படி பல காரணங்களுக்காக இருக்கலாம்.
இப்போதெல்லாம் பங்குகள் வாங்க, விற்க, முதலீடு செய்வதற்கு தேவையான ஆலோசனைகள் பெற என ஒரு வங்கியால் வழங்கப்படாத சேவைகளே இல்லை எனலாம்.
இவர்கள் அனைவருமே வாடிக்கையாளர் என கருதப்படுகிறார்களா?
உலகப் புகழ் பெற்ற சர் ஜான் பேஜட் இவ்வாறு கூறுகிறார். 'ஒருவர் வாடிக்கையாளர் என அழைக்கப்படுவதற்கு சம்பந்தப்பட்ட வங்கியில் அவர் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்காகிலும் அடிப்படை பரிவர்த்தனைகள் (Basic banking transactions) செய்திருக்க வேண்டும். சுருக்கமாக கூறினால் அவர் குறிப்பிட்ட கால அளவுக்கு ஒரு சேமிப்பு கணக்காகிலும் வைத்திருக்க வேண்டும்.
அதாவது ஒருவர் வெறும் பண ஓலைகளை வாங்கவோ அல்லது தந்தி மூலம் பணம் செலுத்தவோ, பெறவோ ஒரு வங்கிக்கு சென்று வந்தால் மட்டுமே அவர் அந்த வங்கியின் வாடிக்கையாளர் என கருதப்படுவதில்லை.
'குறிப்பிட்ட கால அளவு' என்பது எத்தனை நாட்கள், வாரங்கள் அல்லது மாதங்கள் என்பது இதுவரை எந்த சட்டத்தாலும் வரையறுக்கப்படவில்லை. அது வங்கி-வாடிக்கையாளர் உறவில் ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக வழக்காடு மன்றங்களை அணுகும் சமயங்களில் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன.
இதற்கு மாறான கருத்துகளையும் சமீப காலங்களில் பல வழக்காடு மன்றங்கள், 'ஒருவர் வங்கியில் கணக்கு வைத்திருந்தாலே போதும் அவர் அதனுடைய வாடிக்கையாளராகிவிடுகிறார். அவர் இத்தனை காலம் அந்த கணக்கில் பண பரிவர்த்தனைகள் செய்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.'வழங்கியுள்ளன என்பதும் உண்மை.
அதுபோன்றே ஒரு வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் கணக்கோ அல்லது வேறு ஏதாவது பரிவர்த்தனைகளை தொடர்ந்து செய்து வந்திருந்தாலே போதும், அவர் அந்த வங்கியின் வாடிக்கையாளர் என கருதப்படுகிறார்.
ஒரு வங்கியின் வாடிக்கையாளர் என கருதப்படுவதற்கு அதன் கிளைகளுள் ஒன்றில் ஒரு கணக்கு வைத்திருந்தாலே போதும் என்பது உண்மைதான் என்றாலும் ஒரு கணக்கை துவக்கிவிட்டு மாதக் கணக்காக அதில் பரிவர்த்தனைகள் ஏதும் செய்யாதிருக்கும் ஒருவர் வாடிக்கையாளர் என கருதப்படுவதில்லை என்றும் கூறலாம். அதாவது ஒருவர் கணக்கு துவங்கும்போது அதில் பரிவர்த்தனைகள் தொடர்ந்து செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறார் என்று பொருள்.
ஒருவர் வங்கியில் எவ்வித கணக்கும் இல்லாமலும் பண ஓலைகளை பெறவோ அல்லது தந்தி மூலமாக பணத்தை வங்கியின் வேறு கிளைகளுக்கு அனுப்பவோ முடியும். ஆனால் இதற்கென அவர் வங்கிக்கு எத்தனை முறை சென்று வந்திருந்தாலும் அவர் வாடிக்கையாளராகிவிட மாட்டார். ஏனெனில் இத்தகைய பரிவர்த்தனைகள் வங்கியின் அடிப்படை பண பரிவர்த்தனைகளாக கருதப்படுவதில்லை.
ஆக ஒருவர் ஒரு வங்கியின் வாடிக்கையாளராக கருதப்பட அவர் அந்த வங்கியில் ஒரு கணக்கு வைத்திருப்பதுடன் அடிப்படை பண பரிவர்த்தனைகள் எனப்படும் வரவு-செலவு வைத்திருக்க வேண்டும்.
வாடிக்கையாளர் தனிநபராகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அது பல கூட்டாளிகளைக் கொண்ட கூட்டு நிறுவனமாகவோ (Partnership), பல பங்குதாரர்களைக் கொண்ட பொது அல்லது தனியார் நிறுவனமாகவோ (Private or Public Limited Companies - listed or unlisted), தொண்டு நிறுவனமாகவோ (Public Trusts), விளையாட்டு சங்கமாகவோ (Club, Societies,Associations,etc) ஏன் அரசாங்க இலாக்காக்களாகவோ கூட இருக்கலாம்.
வங்கி-வாடிக்கையாளர் உறவு
வங்கி-வாடிக்கையாளர் உறவுகள் பலவிதம்.
1. கடன் பெறுபவர்-வழங்குபவர் உறவு (Debtor-Creditor). வாடிக்கையாளர் வங்கியில் வைத்திருக்கும் கணக்கைப் பொருத்து இந்த உறவு அமைகிறது. ஒரே வாடிக்கையாளர் வங்கிக்கு கடன் வழங்குபவராகவும் வங்கியிலிருந்து கடன் பெறுபவராகவும் இருக்க வாய்ப்புண்டு.
அதாவது சேமிப்பு (Savings or Current accounts) அல்லது வைப்பு நிதி (Fixed Deposit Account) வைத்திருக்கும் வாடிக்கையாளர் வங்கிக்கு கடன் வழங்குபவராகவும் (Creditor) குறுகிய கால கடன் (Loans whether short term or long term) அல்லது ஓவர்டிராஃப்ட் கணக்கு (Overdraft) வைத்திருக்கும் வாடிக்கையாளர் வங்கியிலிருந்து கடன் பெறுபவராகவும் (Debtor) கருதப்படுகிறார்.
இதுதான் வங்கி-வாடிக்கையாளர் உறவுகளில் அடிப்படை உறவாக கருதப்படுகிறது.
தொடரும்..
ஒரு வங்கியின் வாடிக்கையாளர்களுள் முக்கியமானவர்கள் சேமிப்பாளர்கள். இவர்களுள் எத்தனை வகை, இவர்களுடைய குணாதிசயங்களுக்கும் இவர்களுடைய சேமிப்பு முறைகளும் எத்தகையவை என்றும் கூறினேன்.
இந்த பதிவில் சேமிப்பாளர்களுக்கும் வங்கிகளுக்கும் இடையில் என்ன உறவு என்பதைப் பற்றி சுருக்கமாக கூறுகிறேன்.
ஒரு வங்கியின் கிளைக்குள் வந்து செல்லும் அனைவரையுமே வங்கியின் வாடிக்கையாளராக கருத முடியுமா?
அதற்கு முன்பு ஒருவர் எதற்காகவெல்லாம் வங்கிக்கு வந்து செல்கின்றார் என்று பார்ப்போம்.
1. தன்னுடைய சேமிப்பை பாதுகாத்து வைப்பதற்கு வங்கியில் ஒரு கணக்கை துவங்க அல்லது ஏற்கனவே துவங்கியுள்ள கணக்கில் மேலும் பணத்தை செலுத்த, அல்லது அதிலிருந்து தேவையான பணத்தை எடுக்க, அல்லது கணக்கை முடித்துக்கொள்ள.
2. வங்கியிலிருந்து தனக்கு தேவையான பணத்தை கடனாக பெற (இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதை பிறகு விவரமாக பார்ப்போம்)
3. வங்கியிலிருந்து பண ஓலைகளை வாங்க அல்லது மாற்றுவதற்கு (அது டிமாண்ட் ட்ராஃப்டாக இருக்கலாம், மேலாளர் காசோலை எனப்படும் Banker's Cheque அல்லது Pay Order ஆக இருக்கலாம்)
4. வெளியூரிலுள்ள தன்னுடைய வாடிக்கையாளர், நண்பர், உறவினர் ஆகியோருக்கு தந்தி மூலம் பணம் அனுப்புவதற்கு
5. வங்கியில் பாதுகாப்பு பெட்டகம் ஒன்றை வாடகைக்கு எடுக்க என
இப்படி பல காரணங்களுக்காக இருக்கலாம்.
இப்போதெல்லாம் பங்குகள் வாங்க, விற்க, முதலீடு செய்வதற்கு தேவையான ஆலோசனைகள் பெற என ஒரு வங்கியால் வழங்கப்படாத சேவைகளே இல்லை எனலாம்.
இவர்கள் அனைவருமே வாடிக்கையாளர் என கருதப்படுகிறார்களா?
உலகப் புகழ் பெற்ற சர் ஜான் பேஜட் இவ்வாறு கூறுகிறார். 'ஒருவர் வாடிக்கையாளர் என அழைக்கப்படுவதற்கு சம்பந்தப்பட்ட வங்கியில் அவர் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்காகிலும் அடிப்படை பரிவர்த்தனைகள் (Basic banking transactions) செய்திருக்க வேண்டும். சுருக்கமாக கூறினால் அவர் குறிப்பிட்ட கால அளவுக்கு ஒரு சேமிப்பு கணக்காகிலும் வைத்திருக்க வேண்டும்.
அதாவது ஒருவர் வெறும் பண ஓலைகளை வாங்கவோ அல்லது தந்தி மூலம் பணம் செலுத்தவோ, பெறவோ ஒரு வங்கிக்கு சென்று வந்தால் மட்டுமே அவர் அந்த வங்கியின் வாடிக்கையாளர் என கருதப்படுவதில்லை.
'குறிப்பிட்ட கால அளவு' என்பது எத்தனை நாட்கள், வாரங்கள் அல்லது மாதங்கள் என்பது இதுவரை எந்த சட்டத்தாலும் வரையறுக்கப்படவில்லை. அது வங்கி-வாடிக்கையாளர் உறவில் ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக வழக்காடு மன்றங்களை அணுகும் சமயங்களில் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன.
இதற்கு மாறான கருத்துகளையும் சமீப காலங்களில் பல வழக்காடு மன்றங்கள், 'ஒருவர் வங்கியில் கணக்கு வைத்திருந்தாலே போதும் அவர் அதனுடைய வாடிக்கையாளராகிவிடுகிறார். அவர் இத்தனை காலம் அந்த கணக்கில் பண பரிவர்த்தனைகள் செய்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.'வழங்கியுள்ளன என்பதும் உண்மை.
அதுபோன்றே ஒரு வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் கணக்கோ அல்லது வேறு ஏதாவது பரிவர்த்தனைகளை தொடர்ந்து செய்து வந்திருந்தாலே போதும், அவர் அந்த வங்கியின் வாடிக்கையாளர் என கருதப்படுகிறார்.
ஒரு வங்கியின் வாடிக்கையாளர் என கருதப்படுவதற்கு அதன் கிளைகளுள் ஒன்றில் ஒரு கணக்கு வைத்திருந்தாலே போதும் என்பது உண்மைதான் என்றாலும் ஒரு கணக்கை துவக்கிவிட்டு மாதக் கணக்காக அதில் பரிவர்த்தனைகள் ஏதும் செய்யாதிருக்கும் ஒருவர் வாடிக்கையாளர் என கருதப்படுவதில்லை என்றும் கூறலாம். அதாவது ஒருவர் கணக்கு துவங்கும்போது அதில் பரிவர்த்தனைகள் தொடர்ந்து செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறார் என்று பொருள்.
ஒருவர் வங்கியில் எவ்வித கணக்கும் இல்லாமலும் பண ஓலைகளை பெறவோ அல்லது தந்தி மூலமாக பணத்தை வங்கியின் வேறு கிளைகளுக்கு அனுப்பவோ முடியும். ஆனால் இதற்கென அவர் வங்கிக்கு எத்தனை முறை சென்று வந்திருந்தாலும் அவர் வாடிக்கையாளராகிவிட மாட்டார். ஏனெனில் இத்தகைய பரிவர்த்தனைகள் வங்கியின் அடிப்படை பண பரிவர்த்தனைகளாக கருதப்படுவதில்லை.
ஆக ஒருவர் ஒரு வங்கியின் வாடிக்கையாளராக கருதப்பட அவர் அந்த வங்கியில் ஒரு கணக்கு வைத்திருப்பதுடன் அடிப்படை பண பரிவர்த்தனைகள் எனப்படும் வரவு-செலவு வைத்திருக்க வேண்டும்.
வாடிக்கையாளர் தனிநபராகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அது பல கூட்டாளிகளைக் கொண்ட கூட்டு நிறுவனமாகவோ (Partnership), பல பங்குதாரர்களைக் கொண்ட பொது அல்லது தனியார் நிறுவனமாகவோ (Private or Public Limited Companies - listed or unlisted), தொண்டு நிறுவனமாகவோ (Public Trusts), விளையாட்டு சங்கமாகவோ (Club, Societies,Associations,etc) ஏன் அரசாங்க இலாக்காக்களாகவோ கூட இருக்கலாம்.
வங்கி-வாடிக்கையாளர் உறவு
வங்கி-வாடிக்கையாளர் உறவுகள் பலவிதம்.
1. கடன் பெறுபவர்-வழங்குபவர் உறவு (Debtor-Creditor). வாடிக்கையாளர் வங்கியில் வைத்திருக்கும் கணக்கைப் பொருத்து இந்த உறவு அமைகிறது. ஒரே வாடிக்கையாளர் வங்கிக்கு கடன் வழங்குபவராகவும் வங்கியிலிருந்து கடன் பெறுபவராகவும் இருக்க வாய்ப்புண்டு.
அதாவது சேமிப்பு (Savings or Current accounts) அல்லது வைப்பு நிதி (Fixed Deposit Account) வைத்திருக்கும் வாடிக்கையாளர் வங்கிக்கு கடன் வழங்குபவராகவும் (Creditor) குறுகிய கால கடன் (Loans whether short term or long term) அல்லது ஓவர்டிராஃப்ட் கணக்கு (Overdraft) வைத்திருக்கும் வாடிக்கையாளர் வங்கியிலிருந்து கடன் பெறுபவராகவும் (Debtor) கருதப்படுகிறார்.
இதுதான் வங்கி-வாடிக்கையாளர் உறவுகளில் அடிப்படை உறவாக கருதப்படுகிறது.
தொடரும்..
வங்கியுலகம் 2 - சேமிப்பு குணாதிசயங்கள்!
தனிநபர் ஒருவரின் சேமிப்பின் நோக்கம் எதுவாக இருப்பினும் ஒரு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார முன்னேற்றத்திற்கு அது மிகவும் அவசியம். தனிநபர் சேமிப்பு சம்பந்தப்பட்ட நபரின் குணாதிசயங்களைப் சார்ந்தே அமைகிறது என்கின்றார் உளவியல் ஆய்வாளர் லாரி பாவ்லிக்.
சேமிப்பாளர்களை பலவிதமாக வகைப்படுத்தலாம் என்கிறார் அவர்.
1. பதுக்கல்காரர்கள் (Money Hoarders)
பொருட்களை பதுக்குபவர்களைப் போல் அல்ல இத்தகையோர். சந்தையில் மிகவும் அத்தியாவசியமான பொருட்களை பதுக்குவோர் அதை பிறகு அதிக லாபத்திற்கு விற்பதற்காகவே பதுக்குவர். ஆனால் பணத்தை முடக்குவோர் முதலீடு செய்தால் எங்கே அதை இழந்துவிடுவோமோ என்கிற அச்சத்தில் வங்கிகளிலோ அல்லது மற்ற பாதுகாப்பான நிதி நிறுவனங்களிலோ வைப்பு நிதிகளில் முதலீடு செய்வார்கள்.
ஆனால் இவர்கள் பெரும்பாலும் தேவையற்ற, பகட்டான சிலவுகளை தவிர்த்து மிகவும் கவனத்துடன் பணத்தை சேர்ப்பவர்களாகவே இருக்கின்றனர். இத்தகையோர் அதிக செல்வந்தர்களாகவும் இருக்க காரணம் இத்தகைய திட்டமிட்ட சேமிப்புதான் என்றாலும் மிகையாகாது.
சேமித்த பணத்தை வங்கிகளில் முதலீடு செய்து அதிலிருந்து கிடைக்கும் வட்டி தொகையை அனுபவிப்பதுதான் இவர்களுடைய நோக்கம். ஆகவே இவர்களுடைய சேமிப்பு பலமடங்காக அதிகரிப்பதற்கு வாய்ப்பில்லை.
2. சாதனையாளர்கள் (Achievers & Wealth accumulators)
இத்தகையோர் நன்றாக படித்தவர்களாகவே இருப்பார்கள். நல்ல உத்தியோகம் அல்லது தொழில் செய்பவர்களாகவும் இருப்பார்கள். மிகவும் கவனத்துடன் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்பவர்கள். அதாவது தங்களுடைய வாழ்க்கையை பாதையை தெளிவுடன் தெரிவு செய்துக்கொள்வதுடன் அதில் சாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் செயல்படுபவர்கள். அதுபோன்றே ஈட்டும் பணத்தையும் திட்டமிட்டு செலவிட்டு மீதமுள்ளவற்றை அதிக லாபமளிக்கும் முதலீடுகளில் முடக்கி வெற்றியும் காண்பவர்கள். கிடைத்த லாபத்தை வீடு, மனை, வாகனம் ஆகியவற்றில் முதலீடு செய்து வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பவர்களாகவே இருப்பார்கள். சுருக்கமாக கூறவேண்டுமென்றால் சேமிப்பது மட்டுமல்லாமல் அதை அனுபவிக்கவும் செய்பவர்கள்.
3. வணிகர்கள், தொழிலதிபர்கள் (Entrepreneurs
இத்தகையோர்தான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு எனப்படுபவர்கள். தனிநபர் சேமிப்புகள் நாட்டின் முதலீடாக மாறும் வித்தை இத்தகையோரால்தான் நடைபெறுகிறது என்றால் தவறில்லை. முதலீட்டை பெருக்கும் நோக்கத்துடன் எவ்வித தடங்கல்களையும் சந்திக்க தயங்காதவர்கள். தங்களுடைய முதலீட்டையே இழந்துவிடக்கூடிய அபாயத்தையும் சாதுரியத்துடன் எதிர்கொண்டு வெற்றிபெறக் கூடியவர்கள் இவர்கள். ஆனால் சில சமயங்களில் இவர்களுடைய தவறான முடிவுகளால் அல்லது ஒருசிலரது அதீத ஆசையால் நாட்டின் பொருளாதாரமே சீர்குலைந்துவிடவும் வாய்ப்புண்டு என்பதும் மறுக்கவியலாத உண்மை!
4. சுகவாசிகள் (Easy go lucky)
நன்றாக சம்பாதிப்பது நன்றாக அனுபவிப்பது. இதுதான் இத்தகையோரின் வாழ்க்கைமுறையாக இருக்கும். அன்றைய பொழுதிற்கு வாழ்ந்தால் போதும் என்று நினைப்பவர்கள். சேமிப்பு என்பதே இவர்களுடைய அகராதியில் இருக்காது. இத்தகையோரும் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியம் என்கிறார் ஆய்வாளர். ஏனெனில் ஒரு நாட்டின் அனைத்து குடிமகன்களும் சேமிப்பவர்களாகவே இருந்துவிட்டால் அதாவது ஈட்டிய பணத்தை செலவு செய்வதில் நாட்டமில்லாதவர்களாக இருந்துவிட்டால் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள் எதுவும் விற்பனையாகாதல்லவா? ஆகவே ஒரு பொருளாதார சந்தையில் சேமிப்பவர்கள் இருப்பதுபோலவே செலவு செய்பவர்களும் இருக்கத்தான் வேண்டும்.
5. பொருளாதார சூதாடிகள் (Financial Risk Takers)
இவர்கள் சம்பாதிப்பதை பண்மடங்கு பெருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்ய தயங்காதவர்கள். இவர்களுடைய நோக்கம் லாபம், லாபம், லாபம் மட்டுமே. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டும் எண்ணத்துடன் எந்த பாதையிலும் செல்ல தயங்காதவர்கள். வெற்றி கிடைத்தால் வெற்றி இல்லையென்றால் திவால்! இதுதான் இவர்களுடைய அணுகுமுறையாக இருக்கும்.
ஆனால் இத்தகையோர் சிலருடைய வெற்றி ஒரு நாட்டின் தலை எழுத்தையே மாற்றிவிடக் கூடியது. நமது நாட்டில் ஒருகாலத்தில் பொருளாதார அடிமட்டத்தில் இருந்தவர்கள் இன்று நாட்டின் விரல் விட்டு எண்ணக்கூடிய செல்வந்தர்களாக உள்ளனர்!
ஆனால் மேற் கூறியவர்கள் அனைவருமே ஒருநாட்டின் பொருளாதார வளர்சிக்கு பயன்படுகிறார்கள் என்பதும் உண்மை.
தொடரும்..
சேமிப்பாளர்களை பலவிதமாக வகைப்படுத்தலாம் என்கிறார் அவர்.
1. பதுக்கல்காரர்கள் (Money Hoarders)
பொருட்களை பதுக்குபவர்களைப் போல் அல்ல இத்தகையோர். சந்தையில் மிகவும் அத்தியாவசியமான பொருட்களை பதுக்குவோர் அதை பிறகு அதிக லாபத்திற்கு விற்பதற்காகவே பதுக்குவர். ஆனால் பணத்தை முடக்குவோர் முதலீடு செய்தால் எங்கே அதை இழந்துவிடுவோமோ என்கிற அச்சத்தில் வங்கிகளிலோ அல்லது மற்ற பாதுகாப்பான நிதி நிறுவனங்களிலோ வைப்பு நிதிகளில் முதலீடு செய்வார்கள்.
ஆனால் இவர்கள் பெரும்பாலும் தேவையற்ற, பகட்டான சிலவுகளை தவிர்த்து மிகவும் கவனத்துடன் பணத்தை சேர்ப்பவர்களாகவே இருக்கின்றனர். இத்தகையோர் அதிக செல்வந்தர்களாகவும் இருக்க காரணம் இத்தகைய திட்டமிட்ட சேமிப்புதான் என்றாலும் மிகையாகாது.
சேமித்த பணத்தை வங்கிகளில் முதலீடு செய்து அதிலிருந்து கிடைக்கும் வட்டி தொகையை அனுபவிப்பதுதான் இவர்களுடைய நோக்கம். ஆகவே இவர்களுடைய சேமிப்பு பலமடங்காக அதிகரிப்பதற்கு வாய்ப்பில்லை.
2. சாதனையாளர்கள் (Achievers & Wealth accumulators)
இத்தகையோர் நன்றாக படித்தவர்களாகவே இருப்பார்கள். நல்ல உத்தியோகம் அல்லது தொழில் செய்பவர்களாகவும் இருப்பார்கள். மிகவும் கவனத்துடன் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்பவர்கள். அதாவது தங்களுடைய வாழ்க்கையை பாதையை தெளிவுடன் தெரிவு செய்துக்கொள்வதுடன் அதில் சாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் செயல்படுபவர்கள். அதுபோன்றே ஈட்டும் பணத்தையும் திட்டமிட்டு செலவிட்டு மீதமுள்ளவற்றை அதிக லாபமளிக்கும் முதலீடுகளில் முடக்கி வெற்றியும் காண்பவர்கள். கிடைத்த லாபத்தை வீடு, மனை, வாகனம் ஆகியவற்றில் முதலீடு செய்து வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பவர்களாகவே இருப்பார்கள். சுருக்கமாக கூறவேண்டுமென்றால் சேமிப்பது மட்டுமல்லாமல் அதை அனுபவிக்கவும் செய்பவர்கள்.
3. வணிகர்கள், தொழிலதிபர்கள் (Entrepreneurs
இத்தகையோர்தான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு எனப்படுபவர்கள். தனிநபர் சேமிப்புகள் நாட்டின் முதலீடாக மாறும் வித்தை இத்தகையோரால்தான் நடைபெறுகிறது என்றால் தவறில்லை. முதலீட்டை பெருக்கும் நோக்கத்துடன் எவ்வித தடங்கல்களையும் சந்திக்க தயங்காதவர்கள். தங்களுடைய முதலீட்டையே இழந்துவிடக்கூடிய அபாயத்தையும் சாதுரியத்துடன் எதிர்கொண்டு வெற்றிபெறக் கூடியவர்கள் இவர்கள். ஆனால் சில சமயங்களில் இவர்களுடைய தவறான முடிவுகளால் அல்லது ஒருசிலரது அதீத ஆசையால் நாட்டின் பொருளாதாரமே சீர்குலைந்துவிடவும் வாய்ப்புண்டு என்பதும் மறுக்கவியலாத உண்மை!
4. சுகவாசிகள் (Easy go lucky)
நன்றாக சம்பாதிப்பது நன்றாக அனுபவிப்பது. இதுதான் இத்தகையோரின் வாழ்க்கைமுறையாக இருக்கும். அன்றைய பொழுதிற்கு வாழ்ந்தால் போதும் என்று நினைப்பவர்கள். சேமிப்பு என்பதே இவர்களுடைய அகராதியில் இருக்காது. இத்தகையோரும் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியம் என்கிறார் ஆய்வாளர். ஏனெனில் ஒரு நாட்டின் அனைத்து குடிமகன்களும் சேமிப்பவர்களாகவே இருந்துவிட்டால் அதாவது ஈட்டிய பணத்தை செலவு செய்வதில் நாட்டமில்லாதவர்களாக இருந்துவிட்டால் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள் எதுவும் விற்பனையாகாதல்லவா? ஆகவே ஒரு பொருளாதார சந்தையில் சேமிப்பவர்கள் இருப்பதுபோலவே செலவு செய்பவர்களும் இருக்கத்தான் வேண்டும்.
5. பொருளாதார சூதாடிகள் (Financial Risk Takers)
இவர்கள் சம்பாதிப்பதை பண்மடங்கு பெருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்ய தயங்காதவர்கள். இவர்களுடைய நோக்கம் லாபம், லாபம், லாபம் மட்டுமே. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டும் எண்ணத்துடன் எந்த பாதையிலும் செல்ல தயங்காதவர்கள். வெற்றி கிடைத்தால் வெற்றி இல்லையென்றால் திவால்! இதுதான் இவர்களுடைய அணுகுமுறையாக இருக்கும்.
ஆனால் இத்தகையோர் சிலருடைய வெற்றி ஒரு நாட்டின் தலை எழுத்தையே மாற்றிவிடக் கூடியது. நமது நாட்டில் ஒருகாலத்தில் பொருளாதார அடிமட்டத்தில் இருந்தவர்கள் இன்று நாட்டின் விரல் விட்டு எண்ணக்கூடிய செல்வந்தர்களாக உள்ளனர்!
ஆனால் மேற் கூறியவர்கள் அனைவருமே ஒருநாட்டின் பொருளாதார வளர்சிக்கு பயன்படுகிறார்கள் என்பதும் உண்மை.
தொடரும்..
Subscribe to:
Posts (Atom)